Tuesday, November 27, 2012

ஆங்கில அம்மணி


ஆங்கில அம்மணி

அன்றொருநாள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் பேரூந்தொன்றின் ஓா் ஆசனத்தில் நான். யன்னல் வழியாக நடப்பவற்றை இரசித்துக்கொண்டிருந்தேன். அனேகமாக பேரூந்தின் அனைத்து இருக்கைகளுமே நிரப்பப்பட்டிருந்தன. எதற்காக இந்த தாமதம் என்ற கேள்வி என் மனதில். சற்று நேரத்தில் ஓர் அம்மணி தனது seat number ஐ தேடியவாறு வந்துகொண்டிருந்தார். எனக்குப்பின்னே அவரின் இருப்பிடம். பேரூந்து புறப்பட தாமதித்தமைக்கான காரணத்தை அறிந்து கொண்டேன்.



அம்மணி திடீரென எழுந்து நடத்துனரிடம் ஏதோ முணுமுணுத்துவிட்டு வந்தார். மறுகணமே AC கூட்டப்பட்டது. இன்று எனக்கு விறைப்புவலி ஏற்படப்போவது திண்ணம் என எண்ணினேன். அம்மணி என்ன எஸ்கிமோவா் இனத்தைச் சேர்ந்தவரோ? இல்லை இல்லை அவர் கனடாவிலிருந்து வருகிறாராம். குளிரில்லாமல் நானில்லை என வாழ்ந்தவராம். ஆனால் பூர்வீகம் நம்நாடு.

...


நடத்துனரின் இந்த திடீர் நடவடிக்கைக்கு பேரூந்திலிருந்த பெரும்பாலானவா்களின் எதிர்ப்புக் கிளம்பவே AC மறுபடியும் பழைய நிலைக்கு.



ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்த என்னை அம்மணியின் குரல் ஈர்த்தது. அவர் யாருடனோ phone ல் பேசுகிறார். தமிழிலல்ல ஆங்கிலத்தில். எனது முழுக்கவனத்தையும் அவரது உரையாடலில் செலுத்தினேன். பேரூந்தில் அம்மணியின் குரலைத்தவிர வேறெதுவும் கேட்கவில்லை. அப்போது தான் உணர்ந்தேன் அங்கு இருப்பவர்கள் அனைவரும் என்னைப்போல் விடுப்பு பிரியா்கள் என. எல்லோரும் அம்மணியின் உரையாடலைக் கூர்ந்து கவனிக்கின்றனர். அம்மணி பேசுவது ஆங்கிலத்தில் ஆனால் அவருடன் மறுபுறத்தில் phone ல் பேசுபவர் தமிழில் பேசுவது அனைவருக்கும் தெட்டத்தெளிவாகக் கேட்கின்றது. ஏன் அம்மணி ஆங்கிலத்தில் பேசுகிறார்? (இதுக்குப் பேர் தான் scene போடுறதா?)



அம்மணியின் எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் அற்ற உரையாடலைக் கேட்க சுவையாகத்தான் இருந்தது. கேட்டபடியே துாங்கிவிட்டேன்.



திடீரென்று நான் விழித்துப்பார்த்த பொழுது பேரூந்து ஓா் இடத்தில் தரிக்கப்பட்டிருந்தது. எல்லோரும் இருக்கைகளில் அமர்ந்து மீண்டும் பேரூந்து புறப்படத் தயாரான நேரம் முன்று வெள்ளைக்காரர்கள் எங்களுடைய நடத்துனரை அணுகி ஏதோ கேட்டார்கள். அவர்களுடைய ஆங்கில உரையாடலைப் புரிந்து கொள்ள முடியாத நடத்துனா் அரைகுறை ஆங்கிலத்தில் இவ்வளவு நேரமாக build up காட்டிய அம்மணியை உதவிக்கு அழைத்தார். அம்மணியின் முகமாற்றத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ‘இவயோடயெல்லாம் வந்து கதைக்கேலாது ‘ என்று சற்றுக் காட்டமாகவே கூறிவிட்டு ஒரேயடியாக நித்திரையில் ஆழ்ந்தவர் போல் பாசாங்கு பண்ணி அப்படியே அடங்கிவிட்டார்.



இவ்வளவு நேரமும் அமைதியாக அடுத்த ஆசனத்தில் அமர்ந்திருந்த ஒரு வயதானவா் விழிபிதுங்கி நின்ற நடத்துனரிற்கு உதவிக்குச் சென்று நிலமையை சமாளித்தார்.



அதற்குப்பின்னர் பேரூந்து நிசப்தத்துடன் பயணத்தைத் தொடர்ந்தது



குறிப்பு - பல மொழிகளை அறிந்திருத்தல் உலகத்தில் மிக அவசியமான ஒன்று ஆனால் இடம் பொருள் ஏவல் அறிந்து அவற்றைப் பாவிப்பதே மொழியறிவின் பூரணத்துவமாகும்.

Sunday, November 25, 2012


நான் வரைந்த இச்சிறுகதையானது அண்மையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுந்தது.


kaf;fk;

 ஓா் அழகிய காலைப்பொழுது எங்கு பார்த்தாலும் குதுாகலம் கும்மாளம். மங்கலகரமான வாத்திய இசை முழங்க அந்த திருமண நிகழ்வு களைகட்டியிருந்தது. அனைவரும் மாப்பிள்ளையின் வரவிற்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனா். தொலைவில் ஒரு பெரியவரின் குரல் ' மாப்பிள்ளை வந்திட்டார்'. மாப்பிள்ளையை வரவேற்க ஆரத்தியுடன் தயாராகினா் பெண்வீட்டார். திருமண நிகழ்வின் மொத்தக் கட்டுப்பாடும் வீடியோ எடுப்பவா்களின் கையில்.ஆரத்தியெடுக்கத் தயாரானவா்களையும் அவா்கள் விட்டபாடில்லை. ஒருவாறாக மாப்பிள்ளை மண்டபத்தின் வாயிலை அடைந்துவிட்டார். மூன்றுமுறை ஆரத்தி எடுப்பது இந்துக்களின் பண்பாடு. முதல் சுற்று, இரண்டாம் சுற்று, இறுதியாக ஆரத்தித்தட்டத்தை சுற்றும் போது மாப்பிள்ளை தலை சுற்றி தரைமேல்.

மணப்பெண்ணின் தாயார் தன் மகளின் வாழ்க்கையே தொலைந்து விட்டது என எண்ணி பலத்த ஓலமிட்டார். திருமணத்தைக் காண வந்தோர் ஈ மொய்ப்பது போல மாப்பிள்ளையை மொய்க்கத்தொடங்கினா். அங்கிருந்த புத்திஜீவிகள் சிலா் அனைவரையும் சற்று விலகும் படி கூறி ஒருவாறாக ஒரு ‘ lemon juice ' இன் உதவியுடன் மாப்பிள்ளையை எழ வைத்தனா்.

மீண்டும் சடங்குகள் சம்பிரதாயங்கள் களைகட்டத்தொடங்கின. தாலி கட்டும் படலமும் இனிதே நிறைவேறியது.

மாப்பிள்ளையின் மயக்கம் தொடர்பாக கூட்டத்திலிருந்தோர் பலவாறாக கவி பாடினா்.

‘ மாப்பிள்ளை Heart patient ஆம்'
'வருத்தக்காறப்பெடியன இந்தப்பிள்ளைக்கு கட்டிவச்சிருக்கினம்'

இன்னும் பல பல காரணங்கள்..................

மாப்பிள்ளை மயக்கம் போட்டு விழுந்ததற்கான உண்மையான காரணத்தை யாரும் சொன்னபாடில்லை. ஆகவே நான் சொல்கிறேன்.
திருமணநாளன்று மணமகனும் மணமகளும் விரதமிருந்து அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த பின்னர் முதலாவதாக இருவரும் இணைந்து உணவருந்துவது தான் நமது சம்பிரதாயம்.

பாவம் மாப்பிள்ளை!!!!!!!! விரதத்தைப்பற்றி முன்னொருபோதும் அறியாதவா். திருமண வேலைகளை இரவிரவாக கண்விழித்துச் செய்திருக்கிறார். மறுநாள் அதிகாலையில் அவரை விறைக்கும் நீரில் குளிப்பாட்டியிருக்கின்றனா். வீடியோக்காரர்கள் படம் பிடிப்பதற்காகவே மிகவும் ஆறுதலாக மாப்பிள்ளைக்கு அபிசேகம் செய்திருக்கிறார்கள் பெரியோ்கள்.

காலைச்சாப்பாடு இல்லை, தலையில் தண்ணீா், போதிய நித்திரையில்லை. மாப்பிள்ளை மயக்கம் போட்டு விழுவார்தானே.

சடங்குகளும் சம்பிரதாயங்களும் மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதவாழ்விற்கு அவசியமானவை. ஆனால் அவை மனிதனையே கட்டுப்படுத்துகின்றபோது விளைவுகள் விபரீதமாகலாம்.

All Rights Reserved © Saambavi Sivaji  

Saturday, November 17, 2012


கருகும் மொட்டுக்கள்



juzpapy; te;Jjpj;j jspu;fs;
,d;W fUfpa nkhl;Lf;fsha;
jpdk; jpdk; rpijf;fg;gLk; mtyk;
Ntnwq;Fk; ,y;iy ,J vk; jha;j;jpUehl;by;!

fatu;fspd; gpbapy;
fUfpg; Nghapd fdTfs;
nkhl;nlhd;W muf;fd; ifg;gl;L
kbe;J NghdJ
Mdhy; muf;fNdh mtdpapy; Mde;jkhf>
Nfl;ghu; ahUsu;!!!

Xatpy;iy muf;fu;fspd; Ntl;il
jPutpy;iy gpQ;Rfspd; Gyk;gy;
m];jkpj;Jg; Nghd mgiyfspd; tho;T
tpbAkh?

All Rights Reserved © Saambavi Sivaji  

Friday, November 2, 2012

Sweet Memories


Sweet Memories



 I stepped into the premises

 My tiny hand clung in my mother’s

 Looking strangely at the huge blocks and lovely gardens

 Looking at the motto “The Truth Shall Make you Free”,

 Which symbolizes the spirit of American missionaries,

 Not knowing what it really means.



I stepped into the play school

Looking anxiously

At the two little girls

Playing a green ball.

I was invited! Oh the happy moments, mutual smiles

Lovely joining not knowing the little ones will be my pals forever.

Not realizing the smooth transformation that was taking place

From my mother’s care into the world of fun and joy.



I then saw a smart tall woman at the piano

Her eyes were gleaming behind her spectacles

She smiled at me and I smiled back

Not knowing I’ll become her admirer.



Sweet days passed

New friends, new lessons, new blossoms!

Happiness and bitterness, crying and laughter

Chatting and cheating, quarrels and jokes

Cherished me and nourished me day by day.



New changes, New faces

A new woman as our principal

Her word never hurts

Her smile stole our hearts.



Years passed swiftly

Meetings and performances

Exams and excursions

Cheers and changes.

The happiness didn’t last long

As an unknown storm attacked in 09.



Bravely faced the challenges

Wisely chased the evils

Spring came back

Filled our hearts with joy.



Sweet memories gently flow

Now I gather and collect the treasure

The victories, the losses

The proud times

The moments of tears

Taught me tolerance

Gave me strength.


Sixteen long years of happiness

Is going to end……….

My school, my love, my almamater,

The pride of the nation

American donation

The  history of women’s education.



The pinnacle of eminence

Again the moment of transformation

But this time from the lap of my almamater back to the society

Parting is difficult

Feelings are strong

But one thing I firmly believe

“The truth shall make me free"

All Rights Reserved © Saambavi Sivaji