Tuesday, December 31, 2013

2013 and Myself



The year 2013 blossomed so rapidly and going to end within hours. January awaited me with my Advanced Level results. I was beaming with happiness to see the results of a heavily loaded two and a half years. I received ‘B’ for English literature. After eight years a “B” for English literature from Jaffna is mine. For me it seemed a life time achievement. We took Communication & Media Studies for the first time in Northern Province. We were afraid when we took this challenge because Teachers’ Guide is not available for Media Studies. We won the challenge and came up with good results. I got an ‘A’ for Media Studies. The only person to get an ‘A’ in Northern Province (Just boasting)

A new phenomenon in my life was I received the opportunity to teach English in my school. I was given grades 10, 11, A/L and a grade one class consisting of cute little tiny tots. I taught the little ones Environmental Studies. The experience was entirely different. I specially loved the little ones. They made my days so special. The innocent hearts always welcome me with lovely smiles. A special mention should be made about Tharulalan. He was commonly known as the “Naughty boy” in the entire grade one classes. Controlling him was the most difficult task for me during those days. He jumped up and down on the table and chairs. He never brought colour pencils and always created problems taking other children’s. I do miss them now.

My other classes were grownups. My grade Eleven students sat for their Ordinary Level Exams and waiting for the results. Hope 2014 will give them good results.

I visited India for the very first time with Amma. It was a short visit as we stayed there for one week. I was able to visit Anna University as Amma’s conference took place there. We visited some temples and a ride all over Chennai. I loved the trip.

“Kathai Sollada Tamizha” a page in facebook provided me a platform to post my writings.  I started scribbling when I was small. Whenever I sit with my pen I do write something. I am a bilingual scribbler. Sometimes those writings turn into mad stories. My writings were known only to me. I joined this particular page in 2012 and started posting my stories. The people in that group welcomed me most warmly and encouraged me to write giving valuable and effective feedback. The page turned me into a translator (although not quite up to the mark) too. I translated two English stories of a writer named Alagu Subramaniam. Even though I received positive feedback from many people, I learnt that there are a group of people readily waiting to point their fingers at us and to negatively criticize us. The translations gave me many lessons and turned me even stronger than before. All my thanks go to “Kathai Sollada Tamizha”

Write to reconcile - a creative writing project turned a new page in my life. A selected number of participants were chosen to participate in this valuable workshop. During the workshops we were taught by famous Sri Lanka authors Shyam Selvadurai and Nayomi Munaweera. We created two stories and selected one story and worked it with Shyam. Finally our stories were published in an anthology in September – 2013. I was fortunate to speak a few words about my experience at the book launch. The joy I received while seeing my story in a book can never be expressed in words. Write to reconcile gave me a recognition as a budding writer.  The joy continued when I was selected as one of the Panelists at a Panel Discussion organized by the American Centre.

I acted in our senior poetic drama along with my friends. I started acting in our school dramas when I was nine years old. My very first role was a “King”. We won places at Provicial and National level. This time we did Shakespeare’s “A Merchant of Venice”, tenth drama I acted in my school career. I was given the role Portia. Hope I did my best.

This year too I was given the opportunity to play violin in our Eastern Orchestra at the Combined Carols 2013.

I was selected for the Leadership Training for University entrants in November. It was a three weeks programme held in Army Training School – Maduruoya. It was a new experience. As I was not used to physical exercises I fell ill. But I somehow managed. I met new friends.

Now I am at the brim of 2013. I thank the almighty for the love and care showered on me throughout the entire year 2013.

Now a warm welcome to the forthcoming babe 2014.   
 

All Rights Reserved © Saambavi Sivaji   

Sunday, December 29, 2013

கூலிக்கு மாரடிப்போர்

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆங்கில எழுத்தாளரான அழகு சுப்ரமணியம் என்பவரால் 1964ல் வெளிவந்த ”The Professional Mourners” எனும் ஆங்கில சிறுகதையைத் தமிழாக்கும் முயற்சி.

கூலிக்கு மாரடிப்போர்

ஒரு  சனிக்கிழமை இரவு எனது ஆச்சியின் உயிர் பிரிந்த வேளை நான் எனது தம்பி தங்கையுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்தேன். மறுநாட்காலை ஆச்சியின் வீட்டிலிருந்து வந்த அழுகை ஓலத்துடனும் பறைமேள முழக்கத்துடனும் விழித்தோம். அவசரமாக உடையை மாற்றிக்கொண்டு ஆச்சியின் வீட்டை விரைந்தோம். அங்கு ஒரு பெரிய கூட்டம்.எல்லைவேலிக்கும் வெளி விறாந்தைக்கும் இடையில் உள்ள இடைவெளியைச் சனக்கூட்டம் நிரைப்படுத்தியிருந்தது

அந்தக் கூட்டத்திற்குள் ஒருவாறு நுழைந்து வீட்டின் நடுப்பகுதியை அடைந்துவிட்டோம்.  எமது கண்கள் அம்மாவைத் தேடின. நாங்கள் சந்திக்கும் முதல் மரண வீடு இது என்பதால் சற்றுப் பயமாகவே இருந்தது. நாங்கள் வீட்டை அடைந்ததும் அடையாததுமாக "நிகழ்வின் தலைவர்" இன் சத்தம் காதில் விழுந்தது. மரண நிகழ்வின் அனைத்து ஏற்பாடுகளிற்கும் அவர் தலைமை வகித்தார். அவர் எங்களுடைய மாமா, ஒரு சிறு பாடசாலையில் ஆசிரியர், அதுமட்டுமல்ல கொஞ்சம் மூளைக்கோளாறுள்ளவர்அவர் எப்பொழுதும் உரத்த தொனியில் விரைவாகப் பேசுவார். அவர் கோபமாக இருந்தால் முழுக்கிராமமும் கேட்கும் அளவிற்கு உச்சஸ்தாயியில் கத்துவார். இன்றும் கூட அவர் மிகுந்த கோபமாக உள்ளார் ஏனெனில் கூலிக்கு மாரடிப்போர் இன்னும் வந்து சேரவில்லை.

"நானே போய் அதுகளைக் கூட்டிக்கொண்டு வாறன்."  எனக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார். கூலிக்கு மாரடிப்போரைப் பற்றி நான் பல கதைகளைக் கேள்விப்பட்டுள்ளேன், ஆவலின் மிகுதியால் எனது தம்பி, தங்கையை விடுத்து அவர் பின்னால் ஓடினேன் . வீடுகளோ இரைச்சலோ அற்ற மணல் வீதிகளினுாடாகவும் ஒடுங்கிய  பாதைகளினுாடாகவும் நடந்தோம்இருப்பினும் பாம்புகள் சீறும் சத்தமும் நரிகள் ளையிடும் சத்தமும் கேட்பதாய் நான் உணர்ந்தேன்.   "பாம்புகள் உன்னைக் கடிக்காது. பயப்பிட வேண்டாம்" மாமாவின் திடப்படுத்தல். கடற்கரையில் நிரையாக குடிசைகள் உள்ள பகுதியை வந்தடைந்தோம். ஆங்காங்கே மீனவர்கள் சிலர் துணைவியரின் உதவியுடன் வலைகளை சரி செய்துகொண்டிருந்தனர் . வேறு சிலர் கட்டுமரத்தைக் கடலில் தள்ளிக்கொண்டிருந்தனர். "எல்லாத்தையும் நிப்பாட்டுங்கோ, மூளைகெட்ட பரதேசிகளே" மாமா பலத்த சத்தத்துடன் அவர்களிடம் விரைந்தார்

"என்ர மாமீன்ர செத்தவீடு நடக்குதெண்டு உங்களுக்குத் தெரியாதோ கீழ்ப்புத்திக்காரங்களே, அங்க நிக்க வேண்டிய ஆக்கள் ஏன்  இங்க நிக்கிறியள்?"

"எங்களுக்கு செத்த வீட்டைப் பற்றி தெரியாது ஐயா" எனக் கூறிக் கொண்டு மீன்பிடி வலைகளை விட்டு விலகினர். "நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில அங்க இருப்பம்" கரங்களைக் கூப்பியவாறு மண்டியிட்டனர்அவர்களைக் கடிந்த வண்ணம் கூலிக்கு மாரடிப்போரைத் தேடி மாமா விரைந்தார். "அங்க தான் இந்தக் கேடுகெட்ட பொம்பிளையள் இருக்கிறதுகள்" எனக் கூறி நாங்கள் முதலில் பார்த்த குடில்களை விடச் சிறிய குடில்களைச் சுட்டிக் காட்டினார்.
குடிலுக்கு வெளியே நின்று உள்ளிருப்பவர்களை அழைத்தார். கரடுமுரடான சேலைகளை அணிந்த இரு பெண்கள் வெளியே வந்தனர்.அவர்கள் அணிந்த சேலைகள் தோள்ப்பட்டையையோ, தலைப்பகுதியையோ மறைக்கவில்லை. மணிக்கட்டிலிருந்து முழங்கைவரைக் காப்புக்களை அணிந்திருந்தனர். அவர்கள் நடக்கும் போது காற்சலங்கைகள் கிலுங்கின. மாமா அவர்களைப் பார்த்துக் கத்தினார்.

 "நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பின்னான் என்ர  மாமீன்ர செத்தவீடு இண்டைக்கு நடக்கப்போகுதெண்டு இவ்வளவு நேரமாகியும் ஏன் இன்னும் வரேல்ல?"   
 
"நாங்கள் வாறத்துக்குத்தான் வெளிக்கிட்டுக்கொண்டு இருந்தனாங்கள் ஐயா தயவு செய்து எங்களை மன்னியுங்கோ" அவர்களில் ஒரு பெண் கூறினாள்.

"மிச்சாக்கள் எங்க?" நிகழ்வின் தலைவரின் உறுமல்

"பக்கத்தில ரெண்டு சகோதரிகள் தான் இருக்கினம் மிச்சாக்கள் எங்கை எண்டு எங்களுக்குத் தெரியாதையா. ஆனால் இவையும் கூட இண்டைக்கு வரேலாது அவேன்ர  அம்மா காலமை செத்துப்போயிற்றா”

"இது என்ன முட்டாள்தனம்! எங்க அந்தப் பொம்பிளையள் இருக்கிறதுகள்?" அவர் வலிந்து வற்புறுத்தினார்.

"இங்க இருந்து கன தூரத்தில இல்ல ஐயா"

"என்ன அங்க கூட்டிக்கொண்டு போ"

அந்த இரு பெண்களும் முன்னால் செல்ல நாங்கள் பின் தொடர்ந்தோம். இவர்கள் ஒரு குடிலின் வெளியே நின்று இரு சகோதரிகளையும் அழைத்தனர். தமது மார்பகங்களின் மீது வழுக்கி இருந்த சேலைகளைக் கட்டியபடி அவர்கள் வெளிப்பட்டனர்.

“சிறிது நேரம் அவ்விடத்திலேயே நின்று தயங்கிய பின்னர் நிகழ்வின் தலைவரின் காலடியில் விழுந்தனர்.

 "இண்டைக்கு மட்டும் எங்களை மன்னியுங்கோ ஐயா எங்கட அம்மா இண்டைக்கு காலமை மோசம்போய்ற்றா. நாங்கள் சரியான கவலையாய் இருக்கிறம் மற்றாக்களிண்ட செத்தவீட்டை வந்து அழுகிற நிலமையில நாங்கள் இல்லை.

"அவமரியாதை" தலைவர் சத்தமிட்டார்.  என்ர மாமீன்ர மரணச்சடங்கில அழுகிறத்துக்கு ரெண்டு பேர் பத்தாது. அவா யார் எண்டு தெரியும்தானே.
"அவையள விடுங்கோ ஐயா" இடைத்தரகராக பாத்திரமேற்ற பெண் கூறினாள்.

 "இது நியாயமில்லை . அவையள் தங்கட அம்மாண்ட செத்தவீட்டை உண்மையா அழுறத விட்டிட்டு உங்கட வீட்டை வந்து நடிக்கேலாது.”
என்னுடைய உறவினரின் உதடுகள் நடுங்கியதையும், கண்கள் செந்நிறமானதையும் அவதானித்தேன். சற்றுமுன் இடைத்தரகராகத் தொழிற்பட்ட பெண் நிலத்தை நோக்கினாள். நான் பரிதாபமாகத் தலையசைத்தேன். தலைவரின் சினம் இப்போது மணல் அணைகளினுாடு பாயும் நீர் போல என்னை நோக்கித் திரும்பியது.

"நீ என்ன முட்டாளா?" தலைவர் என்னைத் திட்டினார். "இதைப் பற்றி எல்லாம் உனக்கு என்ன தெரியும்? உன்ர அப்பாண்ட வழக்கறிஞ நண்பர்கள், உயர் நீதிமன்ற நீதிபதி, பொலிஸ் நீதவான் எல்லாரும் வருகினம். எங்கட செத்தவீட்டில மாரடிக்கிறாக்கள் கனக்கப்பேர் இல்லாட்டி எங்களைப் பற்றி என்ன நினைப்பினம்? "

முழந்தாளிட்ட நிலையிலிருந்த சகோதரிகள் மீண்டும் இறைஞ்சினர். "நாங்கள் வேணுமெண்டு அப்பிடிச் சொல்லேல்ல ஐயா" அவர்களில் ஒருத்தி கூறினாள். "இந்த முறை மட்டும் எங்கள விடுங்கோ. உங்கட வீட்டை இன்னொரு மரணவீடு நடக்கேக்கை எங்கட தொண்டை காயுறவரைக்கும் குளறுவம்!"

"உது என்ன தடிப்பு?" மாமா மீண்டும் சத்தமிட்டார். அப்ப என்ர வீட்டை இன்னொரு செத்தவீடு நடக்கவேணுமெண்டு ஆசைப்படுறாய் என்ன? நான் சாக வேணும் எண்டு தான் நீ நினைப்பாய். கேடுகெட்ட பிராணியள். நீதிபதியிட்ட சொல்லி  நல்ல அடி வங்கித் தரவேணும் உந்த மாதிரிக் கதைக்கிறத்துக்கு" எனக் கூறி அவர்களது சேலையைப் பிடித்து இருவரையும் தற தற வென தரையில் இழுத்தபடி சிறிது தூரம் நடந்தார்.
"தயவு செய்து உங்கட கையை எடுங்கோ, நாங்கள் வாறம்." இருவரும் புலம்பினர்.

நிகழ்வின் தலைவர் அவர்களை விடுவித்துவிட்டு முன்னே நடந்தார். நாங்கள் அவரைப் பின்தொடா்ந்தோம். ஆச்சியின் வீட்டை அடைந்தவுடன் மாரடிப்போர் கைகளை மேலே உயர்த்தி தலைமுடியைத் தளர்த்தி அழுதனர். மரண வீட்டின் ஏனைய பெண் உறவினர் மற்றும் நண்பர்கள் இரண்டு, மூன்று பேர் கொண்ட குழுக்களாக ஒவ்வொருவர் கழுத்திலும் மற்றையவரின் தலையை சாய்த்ததபடி அமர்ந்திருந்தனர். இவர்களுடன் கூலிக்கு மாரடிப்போர் இணைந்தனர். ஆனால் மற்றைய பெண்களிலிருந்து சற்று தொலைவில் அமர்ந்தனர். கைகளை வானை நோக்கி உயர்த்தி, தமது தலையையும் மாரையும் கைகளால்  அடித்தவண்ணம் புலம்பியபடி அழுதனர். அவர்கள் அழும்போது ஆச்சியியைப் போற்றிப் பல வார்த்தைகளைக் கூறினர். சிவபெருமானின் அருளால்த் தான் ஆச்சி அவருடைய செல்லப் பேரப்பிள்ளை மலேசியாவில இருந்து வரும் வரை உயிரோடிருந்தார் எனக் கூட்டத்தில் கவலையுடன் அழுதுகொண்டிருந்த பெண்கள் கூறியது மாரடிப்போரின் காதில் விழுந்தது. தமக்கு ஒரு புது ஸ்லோகம் கிடைத்ததை இட்டு அவர்கள் நிலத்திலிருந்து எழுந்தனர், தலையைக் குமைத்து, கைகளைக் குறுக்காகக் கட்டி தோள்ப்பட்டைகளை அடித்தவாறு அழுதனர்.

"உங்கட செல்லப்பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ ஓ ஓ எங்கட பாசமுள்ள அம்மாவே...."

"உங்கட பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ அம்மாவே"

இதே நேரத்தில் தன்னுடைய கைங்கரியத்தைப் பற்றி நிகழ்வின் தலைவர் தனது நண்பர்களுக்குப் பறைசாற்றிக்கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தது போலல்லாது அனைவரும் அவரது கொடூரமான செயலைக்கேட்டுத் திகைப்படைந்தனர். நிகழ்வின் தலைவரின் மனிதாபிமானமற்ற செயலிற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். தலைவரை மாரடிப்போரிடம் மன்னிப்புக் கேட்கும்படி செய்தனர். நிகழ்விற்கு வந்திருந்தவர்களில் பலர் தாயை இழந்த சகோதரிகளிற்கு தமது துக்கத்தைத் தெரிவித்தனர். சகோதரிகளுக்கு நேர்ந்த அவலத்துக்குப் பணம் தருவதாக வாக்குறுதியளித்த அப்பா, அவர்களை வீடு செல்லுமாறு வலிந்தார்.

நிகழ்வின் தலைவர் தண்டிக்கப்பட்டார். மாரடிப்போர் மரணச்சடங்கு முடியும் வரை தமது பங்களிப்பை வழங்குவதாகக் கூறினர். நிகழ்வின் தலைவரின் செயல் அனைவராலும் வெகுவாக விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனைச் சரி செய்வதற்காக முன்னைவிட அதிகமாக அனைத்து வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பறைமேளம் அடிப்போரைக் கடிந்தார். ஏனெனில் அவர்களால் மாரடிப்போரின் அழுகை ஒலிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

பின்னர் சடங்கிற்குத் தேவையான அரிசி, சாம்பிராணி மற்றும் இதர இத்தியாதிகளை பூதவுடலுக்கு அண்மையில்க் கொண்டு வந்து வைத்தார். மாரடிப்போரை அழைத்து வருவதற்கான அவரது முயற்ச்சியின் பயனாக ஏற்பட்ட களைப்பினால், திடீரென மயக்கமுற்றுத்  தரையைத் தழுவினார். கூட்டத்திலிருந்த சிலர் கூச்சலிட்டனர், ஏனையோர் தலைவருக்கு உதவிக்கு ஓடினர். அவரை ஒரு மூலையில் அமர்த்தி தண்ணீரால் முகத்தை அலம்பினர். ஒரு சில நிமிடங்களில் தலைவர் தெளிவடைந்தார். தான் விரைவில் சரியாகி விடுவேன் எனக் கூறினார். தலைவரின் நண்பர்கள் மரணச்சடங்கை நடாத்துவதற்க்குப் போதிய ஆட்கள் இருப்பதனால் தலைவரை  ஓய்வெடுக்குமாறு கூறினர். ஓய்விலிருந்த சகோதரிகள் இப்போது தமது கீச்சிடும் ஒலியினால் இடத்தை நிரப்பினர். தலைவரைப்பற்றி சிறிதும் பொருட்படுத்தாது புலம்பினர். நான்கு மாரடிக்கும் பெண்களும்  ஒன்றாக இணைந்தனர். அவர்களது உடல்கள் காற்றில் ஆடும் நாணல் போல் அசைந்தாடின. அனைவரும் ஒரே பல்லவியில்ப் புலம்பினர்.

"ஏழைகள் எல்லாரும் நீங்கள் இல்லாம தவிக்கப்போகினமே! ஓ நீங்கள் கொடைவள்ளலேல்லோ ஓ..... ஓ…. ஓ.....”

"கொண்டாட்டங்களில ஆர் எங்களுக்குச் சாப்பாடு தரப்போகினம்?"

""உங்கட பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ எங்கட பாசமான அம்மா...."

"உங்கட பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ அம்மாவே"

சிறிது நேரத்தில் அவர்களது புலம்பல் மெதுவாகத் தேய்ந்துகொண்டு சென்றது. ஆனால் ஐயர் வந்தவுடன் மீண்டும் புலம்பல் உச்சக்கட்டத்தை எட்டியது. ஐயா் தன்னுடைய கிரியைகளைச் செய்யும் வரை அமைதி நிலவியது. அடிக்கடி உச்சரிக்கப்படும் 'பேரப்பிள்ளை' என்ற வார்த்தை ஐயரின் ஆவலை அதிகப்படுத்தியது. பின் அவருக்கும் தம்புவைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. ஐயர் தம்புவைப் பூதவுடலுக்கு அருகில் அழைத்து ஊதுவர்த்தி ஏற்றிப் பிரார்த்தனை செய்யுமாறு கூறினார். இவ்வளவு நேரமும் அடக்கிவைத்திருந்த கவலை கண்ணீராய்த் தம்புவின் கண்களிலிருந்து வழிந்தது.

"எனக்காக இவ்வளவு நாளும் பாத்துக்கொண்டு இருந்தீங்களே" தம்பு அழுதான்.

"விதி என்னை இவ்வளவு நாளும் உங்களிட்டக் கொண்டுவந்து சேர்க்கேல்லை. இப்ப நான் வந்த பிறகு நீங்கள் படுத்தபடுக்கையாயீட்டீங்களே. உங்களோட ஒருக்காக் கூட என்னால கதைக்க முடியேல்ல"

மாரடிப்போரின் புலம்பலுக்கு இன்னுமொரு ஸ்லோகம் கிடைத்தது.
"ஏன் இவ்வளவு நாளும் பேசாம இருந்தனீங்கள் ஒரு பெரிய வழக்கறிஞரிண்ட அம்மாவே.....”

"உங்கட பட்சமுள்ள சொந்தத்தோட ஒருக்காக்  கதைக்கமாட்டியளோ அம்மாவே....."

"மீன் போல இருக்கிற உங்கட கண்ணைத் திறவுங்கோ...."

"மதுரை மீனாட்சி அம்மனிண்ட கண்ணெல்லோ உங்களிண்ட கண்"

"உங்கட பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ ஓ ஓ எங்கட பாசமான அம்மாவே...."

"உங்கட பேரப்பிள்ளை வந்திட்டார் எழும்புங்கோ அம்மாவே"

All Rights Reserved © Saambavi Sivaji   

Saturday, November 16, 2013

வெள்ளைக் கிழவியும், கூனற் கிழவனும்



அது ஒரு அழகிய மாலைப்பொழுது. மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் பொழிந்த மழையின் பின்னே எட்டிப் பார்க்கும் பொன்னிற வெயிலில் தெறித்த ஓரிரு மழைத்துளிகள் ஆங்காங்கே வைரங்களாக ஒளி வீசித் தெறித்து விழுந்தன. 

இயந்திரம் போல் ஓடிகொண்டிருக்கும் மனிதர்களும் அவர்களின் அர்த்தமற்ற தேடல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதன் உணர்வுகளற்ற இயந்திரமாக தொடர்ந்தும் ஓடுகின்றான். உணர்வுகள் மரித்துப் போன நிலையிலும் கூட தொடர்ந்து ஓட்டத்தை நிறுத்தாமல் ஓடுகின்றான். அவன் கடந்து வந்த பாதையை வெறும் சடப்பொருட்கள் நிரப்பியிருந்தன. ஓடிக்கொண்டிருப்பவன் ஓட்டத்தை நிறுத்தும் போது அவன் எதிபார்ப்பவை எட்டாக்கனியாய்ப் போய்விடுகின்றன . அன்பு, பாசம், காதலுக்காக ஏங்கும் போது அவன் யாருமற்ற வனாந்தரத்தில் தனித்திருப்பான். மூப்பின் போதே மனிதன் இதனை உணர்கிறான்.

செல்லத்துரையும், சிவமணியும் இந்த இயந்திர உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் காதலுடன் கழித்தவர்கள். முதுமையின் முழுப்பரிமாணத்தில் தொடர்கிறது அவர்களது வாழ்க்கை. 

அந்த இயந்திரத் தெருவின் மூன்றாவது வீட்டின் விறாந்தையில் அமர்ந்து கொண்டு ஓய்ந்து விட்ட மழையின் பின்னே தெறித்து விழும் துளிகளை இரசித்துக் கொண்டிருந்தனர். 

செல்லத்துரை ஓர் உபாத்தியாயராகக் கடமையாற்றி இளைப்பாறியவர். வெள்ளை வேஷ்டி, நஷனல் என அந்தக் காலத்தில் உபாத்தியாயர்கள் அணியும் உடையை மிடுக்குடன் அணிந்தவர். அவரது கம்பீரமான உடல்வாகுவும், நிமிர்ந்த, நேர்த்தியான நடையும், சிவமணியைப் பெருமிதம் கொள்ளச் செய்தவை. 

இப்போது மூப்பின் சுவடுகள் தாங்கியவராய் அமர்ந்திருந்தார். பழுத்த மாநிறத்தோல் தளர்ந்து ஊசலாடிக்கொண்டிருந்தது. சுருங்கிய கண்களின் மேல் கறுப்பு வளையங்களையுடைய கண்ணாடியை அணிந்திருந்தார். கூனிய தோளிலிருந்த செந்நிற சால்வையை எடுத்து மற்றைய தோளுக்கு மாற்றிக்கொண்டார். அவருக்கு அருகிலிருந்த மூக்குத்தூள்ப் பேணியை மெதுவாக எடுத்து, பெருவிரலாலும் சுண்டு விரலாலும் ஒரு துளியை எடுத்து, தலையை சரித்து மூக்கிற்க்குள்ப் போட்டுக்கொண்டார் . தளர்ந்த மூச்சை ஒருமுறை இழுத்தவண்ணம் சிவமணியை நோக்கினார்.

சிவமணி மழையை விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சேலைத்தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டாள் அந்த வெள்ளைக் கிழவி. பால் நிற நெற்றியில் அவள் வைத்திருந்த குங்குமம் மினுங்கியது. செல்லத்துரையை விட பத்து வயது குறைந்தவளாயினும் நரையும், கூனலும், தள்ளாடலும் எனக் கணவனைப் போலவே காட்சியளித்தாள். இந்த வெள்ளைக் கிழவி ஒரு காலத்தில் பேரழகியாக இருந்திருப்பாள் எனப் பார்ப்போரை ஊகிக்க வைக்கும் ஒரு அழகிய வதனி சிவமணி.

"சின்னவன் போன் பண்ணிணவனோ?" கறுப்புக் கண்ணாடியை சரி செய்தவண்ணம் செல்லத்துரை சிவமணியைக் கேட்டார்.

சிவமணி ஏமாற்றப் பெருமூச்செறிந்தவண்ணம் கணவனை நோக்கினாள்.

"இல்லை ஐயா, அவன் போன கிழமை கதைக்கேக்க சரியான வேலை எண்டு சொன்னவன்.பாவம் களைப்பாத்தான் கதச்சவன்.இந்தக்கிழமை ஏதோ அலுவலா எங்கேயோ போறானாம்.”

கணவனிடம் எதையும் மறைக்காமல்க் கூறும் சிவமணி அடுக்கடுக்காய்ப் பொய் சொன்னாள். மகன்களை விட்டுக்கொடுக்காத தாய்மாரில் தானும் ஒருத்தி என நிரூபித்தாள். 

இந்த ஐம்பது வருட திருமண வாழ்க்கையில் மனைவியை நன்கு அறிந்தவர் செல்லத்துரை. அவள் கூறுவது பொய் என நொடியில் அறிந்து கொண்டார். இலேசாகப் புன்னகைத்துவிட்டு மீண்டும் சிவமணியைக் கனிந்த காதலுடன் நோக்கினார். 

*

சீனியர் ஸ்கூல் சேட்டிவிக்கேற் பரீட்சையில் சித்தியடைந்து தன்னுடைய 20 ஆவது வயதில் உபாத்தியாயராகக் கடமை ஏற்றார் செல்லத்துரை. அந்தக் காலத்திலேயே முற்போக்கு சிந்தனையாளர் எனப் பொதுவாக அறியப்பட்டவர். பாடசாலை, வீடு எனத் தொடர்ந்த அவரது வாழ்க்கையில் சிவமணி நுழைந்த கதை சுவாரஷ்யமானது. 

வழக்கமாகப் பணி முடித்துத் திரும்பிக் கொண்டிருந்த செல்லத்துரை ஒரு வீட்டின் முன் அசையாது நின்றுவிட்டார். வீட்டிற்கு வெளியே சிவமணி ஊறுகாய்க்காக வெட்டி உப்பிடப்பட்ட தேசிக்காயைக் காயவைத்துக் கொண்டிருந்தாள். 

சிவமணியைப் பார்த்தவுடன் செல்லத்துரைக்குப் பொறி தட்டியது. அந்த அழகிய கண்களைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது செல்லதுரைக்கு. ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு மேலிட செல்லத்துரை அவ்விடத்தை விட்டு நகராமல் அங்கேயே நின்றார். தன்னை யாரோ அவதானிப்பதை அறிந்துகொண்ட சிவமணி விறுக்கென்று வீட்டிற்குள் சென்று விட்டாள். 

தொடர்ந்த நாட்களில் செல்லத்துரை அவ்வீட்டைத் தாண்டும் போதெல்லாம் ஏமாற்றமே காத்திருந்தது.

“இனியும் காலத்த மினக்கடுத்தினா வேற யாரவது வந்து இவளைத் தூக்கிக் கொண்டு போயிடுவினம்” என செல்லத்துரையின் உள்ளுணர்வு உணர்த்தியது.

சிவமணியைப் பற்றி ஆராய்ந்தறிந்துவிட்டு தனது தகப்பனிடம் மெல்ல விடயத்தைக் கூறினார். செல்லத்துரை கூறியவற்றைக் கேட்ட நடேசுச் சட்டம்பியாருக்கு உடம்பெல்லாம் வெலவெலத்தது.

“என்னடா சொல்லுறாய்? தாயில்லாப் பிள்ளை எண்டு உனக்குச் செல்லம் தந்து , உன்னைப் பளுதாக்கிப்போட்டன். சனங்களுக்கு உந்த விஷயம் தெரிஞ்சா நான் எப்பிடி வெளியால தல காட்டுறது?” எனக் கூறித் தலையில் கை வைத்தார்.

நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு தந்தையை அணுகினார் செல்லத்துரை 

“அப்பு, நான் எல்லாம் விசாரிச்சுப் போட்டுத்தான் உங்களிட்ட சொல்லுறன். நீங்கள் தானே நீ விருப்பப்படுற விசயத்த மறைக்காமச் சொல்லு எண்டு சொல்லுறனியள்.” அது தான் என இழுத்தார். 

“பேசாமலிருந்தா உவன் அந்தப் பெட்டையை இழுத்துக் கொண்டு ஓடினாலும் ஓடீடுவான்.” நடேசுச் சட்டம்பியாரின் மனதில் சட்டென்று இவ்வெண்ணம் துளிர்விட்டது.

“சரி பாப்பம்” வாஞ்சையுடன் காத்திருந்த செல்லத்துரையிடம் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் நடேசுச் சட்டம்பியார்.

செல்லத்துரையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . அல்லும் பகலும் சிவமணியை எண்ணிக்கொண்டிருந்தார்.

*

சாய்மானக் கதிரையில் அமர்ந்து விசிறிக்கொண்டிருந்த நடேசுச் சட்டம்பியார், வெத்திலைச் சீவலில் சுண்ணாம்பு தடவி வாய்க்குள்த் திணித்து விட்டு செல்லத்துரையை அழைத்தார். சிவமணியைப் பற்றித்தான் கூறப்போகிறார் என அறிந்து கொண்ட செல்லத்துரை அடுத்த கணமே தந்தையின் முன் பிரசன்னமானார்.

“நான் அவையளிட்டப் போய்க் கதைச்சனான். பிள்ளை நல்ல வடிவான பிள்ளை, தகப்பன் கவன்மன்ட் வேலையில இருந்து ரிட்டயர் ஆகீட்டாராம். எல்லாம் நல்லாத்தான் கிடக்கு ஆனால்…”

நடேசுச் சட்டம்பியாரின் முகம் சட்டென்று மாறியதை அவதானித்த செல்லதுரைக்கு நெஞ்சு படபடத்தது. 

நடேசுச் சட்டம்பியார் தொடர்ந்தார் “அந்தப் பிள்ளைக்கு அவை சாதகம் எழுதேல்லயாம்”

“அதால என்ன? சாதகத்திலயெல்லாம் ஒண்டுமில்லை அப்பு” 
செல்லத்துரையின் மேதாவித்தனத்தின் வெளிப்பாடு.

மகனை ஆவேசத்துடன் நோக்கினார் நடேசுச் சட்டம்பியார். 

“என்ன விசர்க்கதை கதைக்கிறாய். சாதகத்தில தான் எல்லாம் இருக்கு. உனக்குச் செவ்வாய் வேற இருக்கு, அந்தப் பிள்ளைக்கு இருக்குதோ , இல்லையோ ஒண்டும் தெரியாது. எந்த நம்பிக்கையில கலியாணம் பண்ணி வைக்கிறது. பேந்து ஏதாவது நடந்தா ஆர் பொறுப்பு?”

செல்லதுரைக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஒரு ஆண் எக்காரணத்திற்காகவும் அழக்கூடாது என சமூகம் வகுத்துவைத்த கோட்பாட்டையும் மீறி செல்லத்துரையின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

விழிநீர் சொரியும் செல்லத்துரையைப் பார்த்து நடேசுச் சட்டம்பியார் இரங்கினார்.

“சரி ஒண்டு செய்வம், எங்கட குலதெய்வம் முருகன் கோயில்ல பூக்கட்டிப் பாப்பம். ஐயரிட்டச் சொல்லி ரெண்டு நிறப் பூக்கட்டுவம். நாங்கள் நினைக்கிற வெள்ளை பூ வந்தால்க் கட்டலாம். இல்லையெண்டா அது பற்றி நினைக்கவே கூடாது. கடவுளின்ட முடிவு தான் கடைசி முடிவா இருக்கும்.”

ஓரிரு நாட்களிலேயே இறைவனின் ஒப்புதல் செல்லதுரைக்குக் கிடைத்தது. பிறகென்ன திருமணம் தான். செல்லத்துரை தாலிக்கயிறை சிவமணிக்கு அணிவிக்கும் வரை அவரின் முகமோ, பெயரோ அறியாதவள் அவள். முகந்தெரியாத கணவனை மனமார ஏற்றுக்கொண்டாள். 

வாழ்க்கையின் நீரோட்டத்தில் நான்கு மகவுகளை ஈன்றாள் சிவமணி. இடப்பெயர்வு, புலப்பெயர்வு, கல்வி, வேலை, திருமணம் என நால்வரும் நான்கு திசையில்ச் சென்று விட, உனக்கு நான், எனக்கு நீ என இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.

*

சிந்தனை கலைந்த செல்லத்துரை திரும்பி மனைவியின் முகத்தைப் பார்க்கிறார். "இண்டைக்கு என்ன நாள் தெரியுமோ உனக்கு?" என்று கேட்டார். "என்ன நாள் ஐயா?" என்றபடி எதுவாய் இருக்குமோ என்று எண்ணியவளாய் செல்லதுரையை நிமிர்ந்து பார்த்தாள் சிவமணி. ஐம்பது வருடங்களுக்கு முன் செல்லதுரையை அடித்து வீழ்த்திய அந்தப் பார்வையை எதிர்கொண்டு தனக்குள் சிரித்துக் கொண்டார் செல்லத்துரை.

"உன்னை நான் கலியாணம் முடிச்சு இண்டையோட சரியா அம்பது வருஷம்" என்றார்.

"அட அதை நான் மறந்து போனன் பாத்தியளோ. ஓமோம் இண்டைக்குத் தான்" என்ற சிவமணியிடமிருந்து அவளது வாழ்வையே பிரதிபலிப்பதான நீண்டதொரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது.

மீண்டும் அவளை நோக்கிய செல்லத்துரை "இந்த அம்பது வருஷத்தில உன்னட்ட இருந்து நான் ஒண்டையும் மறைச்சதில்லை, ஒண்டைத் தவிர. அந்த ஒண்டையும் இண்டைக்கு நான் சொல்லப் போறன். "

"இது என்ன புதிராக் கிடக்கு" என்று நினைத்தபடி அலங்க, மலங்க விழித்தபடி செல்லதுரையை ஏறிட்டு நோக்கினாள் சிவமணி.

அவளது முகத்தைப் பார்க்காது, தெருவைப் பார்த்தபடி செல்லத்துரை கூறத் தொடங்கினார்.

"உனக்கு சாதகம் இல்லாதபடியா கோயில்ல பூக்கட்டிப் பாத்துத்தான் முடிவு சொல்லுவன் எண்டு அப்பு ஒரேயடியாச் சொல்லிப் போட்டார். 

வெள்ளைப் பூவும், சிவப்புப் பூவும் கட்டி வச்சு, குருக்கள் பூசையிலை வச்சுக்கொண்டு வாறதை சின்னப் பிள்ளை ஒண்டு எடுத்துத்தர, வெள்ளைப் பூ வந்தால் சம்மதம், சிவப்பெண்டால் இல்லை எண்டு அப்பு அடிச்சுச் சொல்லிப் போட்டார்.

குருக்களிண்ட மகன் என்ர நல்ல சிநேகிதன். அவனைப் பிடிச்சு ரெண்டிலயும் வெள்ளைப் பூவைக் கட்டுவிச்சன். அவன் எனக்கு உதவி செய்யேக்க இத உன்ர மனுசிக்குக் கூட சொல்லக் கூடாதெண்டு சத்தியம் வாங்கினவன். இப்ப அவனும் உயிரோட இல்லை. மூண்டு மாசத்துக்கு முதல் தான் பேப்பர்ல மரண அறிவித்தல் கிடந்தது." என்றார்.

ஆச்சரியப் புன்னகை சொரிந்த சிவமணியை வெற்றிக் களிப்புடன் நோக்கினார் செல்லத்துரை.சிவமணியின் சுருங்கிய கன்னம் கூட நாணத்தால் சிவந்தது.

All Rights Reserved © Saambavi Sivaji   

Tuesday, August 20, 2013

Hope Amidst Hopelessness



The cloudless night.


The deep filled heart.


A stillness...


A blow....



The unstoppable waves,


The intense pain,


The intolerable emotions


Dragging you through the


Darkest of ditches


Diverging into dilapidation.



The greeny pastures into greedy predators


Rushing and rioting the ravaged rampart. 


Creeping fear clinging through darkness.


Still a ray of hope for a sunshine.

All Rights Reserved © Saambavi Sivaji   


Tuesday, May 28, 2013

Poetry Through Nagging

I wrote this poem four years ago, after reading a Tamil short story. I have forgotten the title of the short story. It is really a funny piece where the wife nags her husband to write a shortstory after her friend's husband won a prize at a short story competition.



‘Write a poem, write a poem’
Nagging my mom from the day
My classmate received a prize in a poetry competition
A function well organized
With people beautifully dressed
Winners walking across
My classmate with her mother went on waving at us.



‘Write a poem, write a poem’
The repeated slogan filled my ears.
What to write, what to write
Echoed my mind as its only response.



‘Inspiration- that is what you need’
Expressed my mom and pushed me into the garden.
‘Shelley wrote his poems in his garden’
She was supporting her actions with evidences.



I was there in the garden for some times
But nothing came to my mind
Except the taste of the red juicy jumbos
Hanging in bunches in the middle of the garden



The second trial awaited me
When I returned from school one day.
Alas! For my surprise
My room had turned out to be a dreamy vision
I shook my eyes and looked at again
Three feathery mattresses one on top of the other
In the middle of the carpet.
Cushions to sit; lovely flowers
Hanging around; pen and paper
Longing someone to pick them up.



My mom quoted a poet’s name this time
Which I honestly don’t remember.
I looked at my father – he turned himself to escape from  a burst of laughter
But the inspiration really worked-I had a peaceful deep slumber.



‘write a poem, write a poem’- nags on my mom
‘You will do it, you will do it’, poor mom she trusts me more than I trust myself.
I learnt somewhere` poetry comes as if leaves come to a tree`
But believe me,
Poetry DO come through the overflow of powerful nagging.

All Rights Reserved © Saambavi Sivaji   

Monday, May 6, 2013

The Helpless

A wail of a helpless victim


From a deserted land


It reaches me... why?


Only me?


The familiarity breeds inside


The pumping emotions


That slowly arise


Again and again I hear that voice


Why it wrings my heart?


The pounding heart beats


The puffing up sweat


Whose voice is that?


It echoes in my heart's core


Thousands of questions lie in smithereens - unanswered.


All Rights Reserved © Saambavi Sivaji